×

“கிழவர்களிடம் தாலி ,வாலிபர்களோடு ஜாலி”-மோனிகாவிடம் மோகம் கொண்டு ஏமாந்த பெருசுகள்

பத்துக்கும் மேற்ப்பட்ட பெருசுகளை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டு அவர்களின் வீட்டிலிருக்கும் நகை பணத்தோடு தலைமறைவான ஒரு இளம் பெண்ணை போலீசார் கைது செய்தார்கள் உத்திரபிரேதேசம் காஸியாபாத்தில் மோனிகா என்ற பெண் டெல்லியிலுள்ள ஒரு திருமண சைட்டில் தனக்கு வயதான டைவர்ஸான மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுப்பார் .உடனே இந்த விளம்பரத்தையும் அதிலிருக்கும் மோனிகாவின் அழகான போட்டோவையும் பார்த்து ஜொள்ளு விட்டு தனியாக இருக்கும் கோடீஸ்வர பெருசுகள் அவரை கட்டிக்க வலை வீசுவார்கள் .உடனே மோனிகாவும்
 

பத்துக்கும் மேற்ப்பட்ட பெருசுகளை ஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டு அவர்களின் வீட்டிலிருக்கும் நகை பணத்தோடு தலைமறைவான ஒரு இளம் பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்

உத்திரபிரேதேசம் காஸியாபாத்தில் மோனிகா என்ற பெண் டெல்லியிலுள்ள ஒரு திருமண சைட்டில் தனக்கு வயதான டைவர்ஸான மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுப்பார் .உடனே இந்த விளம்பரத்தையும் அதிலிருக்கும் மோனிகாவின் அழகான போட்டோவையும் பார்த்து ஜொள்ளு விட்டு தனியாக இருக்கும் கோடீஸ்வர பெருசுகள் அவரை கட்டிக்க வலை வீசுவார்கள் .
உடனே மோனிகாவும் அவர்களை எந்த பெருசு கோடீஸ்வரர் என்று அவர் போனிலேயே இன்டெர்வியூ நடத்தி அவர்களை கல்யாணம் செய்து கொண்டு ஒரு ரெண்டு நாள் குடும்பம் நடத்தி விட்டு அவர்கள் வீட்டிலிருக்கும் நகை பணத்தோடு தன்னுடைய காதலனோடு ஓடி விடுவார் .
இந்நிலையில் காசியாபாத்தில் கிஷோர் என்ற 66 வயது கட்டிட காண்ட்ராக்டர் மனைவியை இழந்து தனியாக வசிப்பதாக கூறி அவரை கல்யாணம் செய்து கொள்ள விரும்பி மனு போட்டார் .அந்த மனுவினை கல்யாண வெப்சைட்டில் பார்த்த மோனிகா அவரை திருமணம் செய்து கொண்டு விட்டு ரெண்டு மாதம் குடும்பம் நடத்திவிட்டு கோடிக்கணக்கான நகை பணத்தோடு தலை மறைவாகிவிட்டார் ,
இதனால் அந்த கோடீஸ்வரர் மோனிகா மீது போலீசில் புகார் கொடுத்த போது , போலிஸார் அவரை பற்றி விசாரித்தபோது அவர் இப்படி 10 கும் மேற்பட்ட பெருசுகளை தன்னுடைய வலையில் விழவைத்து கோடிக்கணக்கில் சுருட்டியுள்ள விவரம் தெரிந்து அவரை கைது செய்து விசாரிக்கிறார்கள் .