×

“கட்டிக்க வர பெண்ணையெல்லாம் வெட்டி விடுறானே” -கோபத்தில் பக்கத்து கடையை என்ன பண்ணாரு பாருங்க

தனக்கு வரும் வரணையெல்லாம் வெட்டி விட்ட ஒரு நபரின் கடையை , ஒரு வாலிபர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பலரை திகைப்புக்குள்ளாக்கியது . கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் சேருபூஜா பகுதியில் வசிக்கும் ஆல்பின் என்ற வாலிபருக்கு 30 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை .அவருக்கு யார் பெண் கொடுக்க வந்தாலும் அவரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கடையிலிக்கிருக்கும் சில நபர்கள் அந்த வரனை கெடுத்து விடுவதாக அவர் நினைத்தார் .அதனால் அந்த கடைக்குள் பல சமூக
 


தனக்கு வரும் வரணையெல்லாம் வெட்டி விட்ட ஒரு நபரின் கடையை , ஒரு வாலிபர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பலரை திகைப்புக்குள்ளாக்கியது .


கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் சேருபூஜா பகுதியில் வசிக்கும் ஆல்பின் என்ற வாலிபருக்கு 30 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை .அவருக்கு யார் பெண் கொடுக்க வந்தாலும் அவரின் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு கடையிலிக்கிருக்கும் சில நபர்கள் அந்த வரனை கெடுத்து விடுவதாக அவர் நினைத்தார் .அதனால் அந்த கடைக்குள் பல சமூக விரோத நடவடிக்கைகள் நடப்பதாக போலீசுக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார் .மேலும் அந்த கடைக்குல்லேயே குடிப்பது ,சூதாட்டம் போன்ற தீய செயல்கள் நடப்பதாக அங்குள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு மனு போட்டார் .ஆனால் எந்த அதிகாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபமடைந்தார் .
அதனால் கடந்த திங்கள் கிழமையன்று ஒரே ஒரு ஜேசிபி இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து அந்த கடையை இடித்து தரை மட்டமாக்கினார் .இந்த காட்சிகள் சமூக ஊடகத்திலும் வைரலாகி வருகிறது .
இப்படி அவர் அடுத்தவர் கடையை இடித்து தரை மட்டமாக்குவதையறிந்த அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்தார்கள் . ,மேலும் அவர் மீது சட்டத்தின் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
அண்மையில் வெளிவந்த மலையாள திரைப்படமான அய்யப்பனம் கோஷியம் படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் நடித்த ஒரு காட்சியை பார்த்துவிட்டு, அவர் இந்த சம்பவத்தை நடத்தியதாக தெரிகிறது என்று அங்கிருந்த பொதுமக்கள் கூறினார்கள் .