×

வேலையில்லாத கணவன் -வெறுத்த மனைவி -அடுத்து தூக்கி சென்று என்ன செஞ்சார் தெரியுமா ?

வேலையில்லாத கணவனை ஒரு மனைவி காதலனோடு சேர்ந்து கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் குஜராத்தின் அகமதாபாத்தில் 38 வயதான ஜிக்னேஷ் சோலங்கி என்று நபர் ரேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் .ஆனால் அந்த கணவர் சோலங்கிக்கு வேலை இல்லாததால் அவர் வேலைக்கு போய் சம்பாதிக்கும் ரேகாவின் பணத்தை எடுத்து செலவு செய்து வந்தார் . ஆனால் ரேகாவுக்கு 19 வயது சபீர் பதான் என்ற காதலன் இருந்துள்ளார் .தன்னுடைய கணவருக்கு வேலை
 

வேலையில்லாத கணவனை ஒரு மனைவி காதலனோடு சேர்ந்து கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்

குஜராத்தின் அகமதாபாத்தில் 38 வயதான ஜிக்னேஷ் சோலங்கி என்று நபர் ரேகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார் .ஆனால் அந்த கணவர் சோலங்கிக்கு வேலை இல்லாததால் அவர் வேலைக்கு போய் சம்பாதிக்கும் ரேகாவின் பணத்தை எடுத்து செலவு  செய்து வந்தார் .

ஆனால் ரேகாவுக்கு 19 வயது சபீர் பதான் என்ற காதலன் இருந்துள்ளார் .தன்னுடைய கணவருக்கு வேலை இல்லாமல் இருப்பதால் அவரோடு வாழ அவருக்கு விருப்பமில்லை ,மேலும் அந்த கள்ள காதலனோடு வாழ முடிவு செய்தார்  .அதனால் கணவரை காதலனோடு சேர்ந்து கொல்ல முடிவெடுத்தார் .

அதன் படி அந்த ரேகாவுக்கு அவரின் காதலன் மற்றும்  நண்பர் ராஜு டாமர் ஆகியோர் உதவி புரிவதாக கூறினர் .அதனால் கடந்த வாரம் அந்த பெண்ணின் கணவர் சோலங்கியை மூவரும் சேர்ந்து கொண்டு ஒரு பிரிட்ஜ் அருகே  தூக்கி சென்றனர் ,அங்கு ஏற்கனவே காத்திருந்த மற்றவருடன் சேர்ந்து கொண்டு அந்த சோலாங்கியை அடித்து கொன்றனர் ,பின்னர் அவரின் சடலத்தை அங்கு தூக்கி வீசிவிட்டு சென்று விட்டார்கள் .

பிறகு  போலீசுக்கு இந்த கொலை பற்றி தகவல் தெரிந்து ,விசாரணை மேற்கொண்டனர் .அந்த விசாரணையில் அந்த கணவரை அவரின் மனைவியே கள்ளகாதலனோடு சேர்ந்து கொலை  செய்ததை கண்டுபிடித்தனர் .பின்னர் அந்த மூவரையும் போலீசார் கைது செய்தனர் .