×

கொலை செய்த மகளை, கொரானாவில் இறந்ததாக கூறிய பெற்றோர் -என்ன காரணம் தெரியுமா ?

தங்களுக்கு பிடிக்காதவரை கல்யாணம் செய்து கொண்ட மகளை அவரின் பெற்றோர் கொலை செய்த கொடுமை நடந்துள்ளது .உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் லிசாரி கேட் பகுதியில் வசிக்கும் சாய்னா, என்ற 27 வயதான பெண் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் ஃபர்மான் என்பவரை காதலித்து வந்தார் .இந்த காதல் விவகாரம் அந்த சைனாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் , ,அவர்கள் அந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் அந்த பெண்ணை
 

தங்களுக்கு பிடிக்காதவரை கல்யாணம் செய்து கொண்ட மகளை அவரின் பெற்றோர் கொலை செய்த கொடுமை நடந்துள்ளது .
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் லிசாரி கேட் பகுதியில் வசிக்கும் சாய்னா, என்ற 27 வயதான பெண் அவருடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் வசிக்கும் ஃபர்மான் என்பவரை காதலித்து வந்தார் .இந்த காதல் விவகாரம் அந்த சைனாவின் பெற்றோருக்கு தெரியவந்ததும் , ,அவர்கள் அந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் .மேலும் அந்த பெண்ணை அந்த காதலனை சந்திக்க தடை விதித்தனர் .இந்நிலையில் அந்த பெண் கடந்த மாதம் காதலன் ஃபர்மானை வீட்டை எதிர்த்து அவர்களுக்கு தெரியாமல் மணந்தார்.


அதனால் அந்த சைனாவின் வீட்டினர் அந்த பெண் மீது கோபமாக இருந்தனர் .அதன் பிறகு கடந்த மே மாதம் 31ம் தேதி சாய்னாவை சமாதாணம் பேசுவது போல தங்களின் வீட்டிற்கு அவரின் பெற்றோர் கூட்டி வந்தனர் .அப்போது அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டனர் .பின்னர் ஊரார் மற்றும் கணவரிடம் அவர் கொரானா பாதித்து இறந்து விட்டதாக பொய் சொன்னார்கள் .இந்நிலையில் அந்த பெண் இறப்பதற்கு முன்பு ஒரு ஆடியோ ஒன்றை தன்னுடைய கணவருக்கு அனுப்பியுள்ளார் ,அதில் தன்னை தன் பெற்றோர் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியுள்ளார் ,அந்த ஆடியோவை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணின் கணவர் போலீசில் அந்த பெண்ணின் பெற்றோர் மீது புகார் கொடுத்தார் .போலீசார் அந்த பெண்ணின் பெற்றோர் மீது வழக்கு பதிந்து , விசாரித்து வருகின்றனர் .