×

“பள பள” ன்னு மின்னிய பணக்கார சிறுவன் -தட்டி தூக்கிய நண்பர்கள் -அடுத்து நடந்த கொடுமை

தங்க செயினுக்காக ஒரு சிறுவனை அவரின் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது மும்பைக்கு அருகிலுள்ள மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த பிவாண்டி தாலுகாவில் பாப்கான் பகுதியில் உள்ள சாய் ராம் காலனியில் சோஹம் பஜகே என்ற 14 வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த சிறுவனின் பெற்றோர் பணக்காரர்கள் என்பதால் அவரின் கழுத்தில் எந்நேரமும் தங்க செயின் அணிந்திருப்பார் .மேலும் அந்த சிறுவனுக்கு பல நண்பர்கள் இருந்தனர் .அதில் 24
 


தங்க செயினுக்காக ஒரு சிறுவனை அவரின் நண்பர்களே கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது


மும்பைக்கு அருகிலுள்ள மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த பிவாண்டி தாலுகாவில் பாப்கான் பகுதியில் உள்ள சாய் ராம் காலனியில் சோஹம் பஜகே என்ற 14 வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த சிறுவனின் பெற்றோர் பணக்காரர்கள் என்பதால் அவரின் கழுத்தில் எந்நேரமும் தங்க செயின் அணிந்திருப்பார் .
மேலும் அந்த சிறுவனுக்கு பல நண்பர்கள் இருந்தனர் .அதில் 24 வயது அக்‌ஷய் வாக்மரே மற்றும் இன்னொரு 17 வயது சிறுவன் ஆகியோர் அந்த பணக்கார சிறுவனின் கழுத்திலிருக்கும் தங்க செயினை எடுக்க திட்டமிட்டனர் .அதன் படி கடந்த புதன்கிழமை அந்த சிறுவனை விளையாட ஒரு தனிமையான இடத்திற்கு கூட்டி சென்றனர் .பிறகு அங்கு வைத்து அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தனர் .அதன் பிறகு அவரின் கழுத்திலிருந்த 12 கிராம் தங்க செயினை கொள்ளையடித்து சென்று விட்டனர் .அதன் பிறகு அந்த சிறுவனை காணாத அவரின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்குப் பதிந்து அந்த சிறுவனை தேடி வந்தனர் .அப்போது ஒரு காலியான இடத்தில் அந்த சிறுவனின் பிணம் கிடப்பதை கண்டு பிடித்தனர் .பின்னர் தங்க நகைக்காக அவரை கொன்ற 24 வயது அக்‌ஷய் வாக்மரே மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்