×

படம் பார்த்து கொண்டிருந்த பெண் -ப்ளேடுடன் பாய்ந்த வாலிபர்கள் -அடுத்து போன் மூலம் வந்த வினை. 

 

போனில் படம் பார்த்து கொண்டிருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்களை போலீஸ் தேடி வருகிறது .


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஓதவ் பகுதியில் 19 வயதான பெண் தன்னுடைய கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் ஆபீசுக்கு சென்றதும் அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை சில வாலிபர்கள் நோட்டமிட்டு வந்தனர் .அதனால் அவர்கள் அந்த பெண்ணை அடைய திட்டம் தீட்டி அதற்க்கான திட்டத்துடன்  காத்து கொண்டிருந்தனர் .
இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை வழக்கம்போல அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு சென்றதும் ,அந்த பெண் மட்டும் தனியாக போனில் படம் பார்த்து கொண்டிருந்தார் .அப்போது அந்த வீட்டின் கதவு திறந்து  இருந்ததால் ,அந்த இரண்டு வாலிபர்களும் வீட்டினுள் நுழைந்து விட்டனர் .அப்போது அவர்களை பார்த்து திடுக்கிட்டு அந்த பெண் விசாரித்த போது ,அவர்கள் தாங்கள் ராஜு என்பவரை தேடி வந்ததாக கூறினர் .அதை கேட்டு அந்த பெண் தனக்கு அப்படி யாரையும் தெரியாது என்று கூறியதும் ,அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை பிளேடால் தாக்கி ,கீழே தள்ளினர் .பின்னர் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடி விட்டனர் .பின்னர் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலில் சேர்த்தனர் .பிறகு போலீசார் வரவைக்கப்பட்டு அந்த அடையாளம் தெரியாத இரு வாலிபர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களை போலீஸ் தேடி வருகிறது.