×

“வீட்டை காலி பண்ணலேன்னா உங்களை காலி பண்ணிடுவேன்” -பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆசிட் வீச்சு .

ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் மீது ஆசிட் வீசிய இரண்டு நபர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மாதவ்பூர் பகுதியில் அஜய் தந்தானி (25) மற்றும் விஜய் தந்தானி (20)ஆகிய இருவரும் வசித்து வந்தார்கள் .அவர்களின் தந்தை அவரின் உறவினரான லஷ்மி தந்தனிக்கு ஒரு வீட்டினை கொடுத்துள்ளார் .அந்த வீட்டில் அந்த பெண் தன்னுடைய ஐந்து மற்றும் எட்டு வயது பெண் குழந்தைகளோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அஜய் தந்தானி
 

ஒரு பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் மீது ஆசிட் வீசிய இரண்டு நபர்களை ராஜ்கோட் போலீசார் கைது செய்தனர்.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மாதவ்பூர் பகுதியில் அஜய் தந்தானி (25) மற்றும் விஜய் தந்தானி (20)ஆகிய இருவரும் வசித்து வந்தார்கள் .அவர்களின் தந்தை அவரின் உறவினரான லஷ்மி தந்தனிக்கு ஒரு வீட்டினை கொடுத்துள்ளார் .அந்த வீட்டில் அந்த பெண் தன்னுடைய ஐந்து மற்றும் எட்டு வயது பெண் குழந்தைகளோடு வசித்து வந்தார் .
இந்நிலையில் அஜய் தந்தானி மற்றும் விஜய் தந்தானி ஆகிய இருவரும் அந்த பெண்ணை தங்கள் தந்தை கொடுத்த வீட்டிலிருந்து காலி செய்ய சொன்னார்கள் .ஆனால் அந்த பெண் அந்த வீட்டை காலி செய்ய மறுத்துள்ளார் .அதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகறாரு வந்துள்ளது .மேலும் அவர்கள் அந்த பெண்ணையும் அவரின் குழந்தைகளையும் கொன்று விடுவதாகவும் அதனால் அந்த வீட்டை காலி செய்யும் படியும் மிரட்டல் விடுத்துள்ளார்கள் .
அதன் எதிரொலியாக கடந்த சனிக்கிழமை லக்ஷ்மி மற்றும் அவரது குழந்தைகள் மீது ஆசிட் வீசினார்கள் , அப்போது அவர்கள் அனைவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. இந்த ஆசிட் தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பினர்.
பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார்கள் .பின்னர் அவர்களது மொபைல் மூலம் அவர்களது இருப்பிடம் ராஜ்கோட்டின் சோட்டிலாவுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.மேற்கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .