×

"வயசுல மூத்தவள வச்சிக்கிட்டது தப்பா போச்சே" -கள்ள காதலியின் கழுத்தில் கல்லை கட்டி நடந்த கொடுமை

 

 

வயதில் மூத்த பெண்ணோடு ஏற்பட்ட கள்ள காதல் தகராறில் அவரை கொன்று ஆற்றில் வீசியவர்களை போலீஸ் கைது செய்தது 


மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில்வசிக்கும் 25 வயதான  ஹர்ஷத் ஜாவ் பாட்டீல் என்ற வாலிபர் ஒரு 35 வயதான பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுப்பட்டுள்ளார் .நாளடைவில் அந்த கள்ள காதல் கசந்தது .அதனால் அந்த பெண் அந்தவாலிபரிடம் அடிக்கடி  தகராறில் ஈடுபட்டார் .இதனால் அந்த பட்டில் அந்த பெண்ணை எப்படியாவது கழட்டி விட நினைத்தார் .அதற்காக அவரின் நண்பரிடம் ஆலோசனை கேட்டார் .
 அவரது நண்பர் கிருதேஷ் அசோக் கினி அந்த .35 வயதுடைய பெண்ணை நூதனமான முறையில் கொலை செய்ய சில ஐடியா கொடுத்தார் .
அதன் படி அந்த பெண்ணை கடந்த  நவம்பர் 27ஆம் தேதி மராம்பல் படா ஜெட்டி அருகே உள்ள ஒரு ஆற்றங்கரையோரம் வரவைத்து அவரை இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டு ,அவரின் கழுத்தில் ஒரு கல்லை கட்டி அந்த ஆற்றில் வீசி விட்டு சென்றனர் .பின்னர் போலீசார் அந்த பெண்னின் உடலை கண்டெடுத்து விசாரணை மேற்கொண்டனர் .அப்போது ஹர்ஷத் ஜாவ் பாட்டீல் மற்றும் அவரது நண்பர் கிருதேஷ் அசோக் கினி ஆகிய இருவரும் அவரை கொன்றதை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர்