×

ஜமீன் பரம்பரை என கூறி 2 லட்சத்தை ஆட்டையை போட்ட பலே ஆசாமி கைது!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் சினிமா ஷூட்டிங் என்ற பெயரில் தேவக்கோட்டையில் சத்திரத்தார் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் இந்த வீட்டை தனது சொந்த வீடு என தெரிந்தவர்களிடம் கூறி வந்த இவர் தன்னை ஜமீன் பரம்பரை என்றும் அளவுக்கு மீறிஅளந்து விட்டுள்ளார். மேலும் ஊரடங்கால் தொழில் முடக்கம் அடைந்தோருக்கு சொத்துப் பத்திரம் மூலம் கடன் கொடுப்பதாக கூற இதை நம்பிய புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த நாகராஜன் 5 கோடி கடன்
 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் சினிமா ஷூட்டிங் என்ற பெயரில் தேவக்கோட்டையில் சத்திரத்தார் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். பின்னர் இந்த வீட்டை தனது சொந்த வீடு என தெரிந்தவர்களிடம் கூறி வந்த இவர் தன்னை ஜமீன் பரம்பரை என்றும் அளவுக்கு மீறிஅளந்து விட்டுள்ளார்.

மேலும் ஊரடங்கால் தொழில் முடக்கம் அடைந்தோருக்கு சொத்துப் பத்திரம் மூலம் கடன் கொடுப்பதாக கூற இதை நம்பிய புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்த நாகராஜன் 5 கோடி கடன் உதவி கேட்டுள்ளார். அதற்கு பெரிய சாமியோ இதற்காக முன் பணம் ரூ.2 லட்சம், 6 பூர்த்தி செய்யப்படாத காசோலைகளை நாகராஜனிடம் இருந்து பெற்றுள்ளார். பணத்தை பெற்ற இரவே பெரிய சாமி அந்த ஊரிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நாகராஜன் இதுக்குறித்து சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதனிடம் புகார் அளிக்க புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெரியசாமி, அவருடன் இருந்த நண்பர் சுந்தர பாண்டியன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கார், மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.