×

கம்பியால் அடித்து கத்தியால் குத்தி… டியூசன் டீச்சர் கொடூர கொலை!

பாளையங்கோட்டை அருகே டியூசன் ஆசிரியரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வந்தவர் உஷா(42). தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக பணியாற்றி வந்தார். பின்னர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்தார். இவருக்கு ரீனா, நீனா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பட்டப்படிப்பு முடித்த நிலையில் மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இவர்களுக்காகவே
 

பாளையங்கோட்டை அருகே டியூசன் ஆசிரியரை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை கேடிசி நகர் பகுதியில் வசித்து வந்தவர் உஷா(42). தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் ப்ரோகிராமராக பணியாற்றி வந்தார். பின்னர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கடந்த சில மாதங்களாக வீட்டிலேயே டியூஷன் எடுத்து வந்தார். இவருக்கு ரீனா, நீனா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பட்டப்படிப்பு முடித்த நிலையில் மனம் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இவர்களுக்காகவே உஷா பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை உஷா அலறுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அச்சமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் அங்கு வந்து கதவுகளை உடைத்து பார்க்கையில் உஷா ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். கம்பியால் அடித்தும் கத்தியால் குத்தியும் உஷா கொலை செய்யப்பட்டு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

போலீசார் கதவை உடைக்கும் போது கதவு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சடலத்தின் அருகே அமர்ந்து உஷாவின் மகள்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட இவர்கள் தாயை கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் உஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு இரு மகள்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.