×

வெளியூர் சென்ற கணவர் -வீட்டில் புகுந்த உள்ளூர் வாலிபர்கள் -அடுத்தவர் மனைவிக்கு நடந்த கொடுமை.

தனியே இருந்த பெண்ணை உள்ளூர் வாலிபர்கள் மூவர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது . உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்ப்பூரில் மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஒரு 30 வயதான பெண் தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் அவரின் கணவர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வார் .அதை அந்த பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நோட்டமிட்டு வந்தார்கள் .அப்போது அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டு அந்த சந்தர்ப்பத்திற்காக காத்து
 


தனியே இருந்த பெண்ணை உள்ளூர் வாலிபர்கள் மூவர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .


உத்தரபிரதேசத்தில் ஷாஜஹான்ப்பூரில் மிர்சாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் ஒரு 30 வயதான பெண் தன்னுடைய கணவரோடு வசித்து வந்தார் ,இந்நிலையில் அவரின் கணவர் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் செல்வார் .அதை அந்த பகுதியை சேர்ந்த மூன்று வாலிபர்கள் நோட்டமிட்டு வந்தார்கள் .அப்போது அவர்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டு அந்த சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருந்தார்கள் .’
கடந்த வாரம் அந்த பெண்ணின் கணவர் மீண்டும் வேலை விஷயமாக மார்ச் 22ம் தேதி டெல்லிக்கு சென்றார் ,.அதை பார்த்த அந்த மூவரும் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அன்று இரவு 10மணியளவில் சுவரேறி குதித்து சென்றனர் .அப்போது அந்த பெண் அந்த மூவரையும் பார்த்து திடுக்கிட்டார் .அதன் பிறகு அந்த மூவரும் அந்த பெண்ணை வாயில் துணியை அடைத்து அவரை கத்த முடியமால் செய்தனர் .அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக அவரை பலாத்காரம் செய்தனர் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணிடம் இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர் .அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வந்தார் .ஆனால் சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய கணவரிடம் மட்டும் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த கணவர் அந்த மூவர் மீதும் போலீசில் புகார் கூறினார் .போலீசார் அந்த மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து , கைது செய்தனர் .