×

தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏரல் அருகே உள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செங்கமலம் (47). இவருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கணேசன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு, கணேசன் தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை, வீட்டிலிருந்து சுமார்
 

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏரல் அருகே உள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செங்கமலம் (47). இவருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கணேசன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு, கணேசன் தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று

காலை, வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில், முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏரல் போலீஸ் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று நள்ளிரவில் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.