×

ஆம்லெட்டை பிடுங்கி சாப்பிட்ட நபரை கொன்ற இளைஞர் : மதுபோதையில் பயங்கரம்!!

ஆம்லெட்டை பிடிங்கி சாப்பிட்ட அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை புழல் லட்சுமிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது உயிரிழந்தவர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது. அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி
 

ஆம்லெட்டை பிடிங்கி சாப்பிட்ட அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை புழல் லட்சுமிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆணின் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புழல் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது உயிரிழந்தவர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது. அத்துடன் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அன்பழகனை தனது காலால், அவரது கழுத்தை மிதித்து கொலை செய்தது தெரியவந்தது.

இந்த இடத்தில் அன்பழகனை கொலை செய்த நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். இவர் அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், டாஸ்மாக் கடையில் தனது ஆம்லெட்டை அன்பழகன் பிடுங்கி சாப்பிட்டதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அன்பழகனை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் கூட்டாளியான அப்பு என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.