×

`காட்டிக் கொடுத்த ஊரடங்கு; காதலிக்க மறுத்த மாணவி!’- வீடு புகுந்து காதலியை கொன்ற காதலன்

பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்துள்ளார் வாலிபர் ஒருவர். இந்த அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவை மாவட்டம், பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரி. இவரது மகள் ஐஸ்வர்யா. பேரூர் தனியார் கல்லூரி பி.காம் இரண்டாம் ஆண்டு படித்த வந்தார் ஐஸ்வர்யா. மாணவியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஊரடங்கால் இருவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். இதனால், செல்போனில் இருவரும் தங்கள் காதலை
 

பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்துள்ளார் வாலிபர் ஒருவர். இந்த அதிர்ச்சி சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை மாவட்டம், பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரி. இவரது மகள் ஐஸ்வர்யா. பேரூர் தனியார் கல்லூரி பி.காம் இரண்டாம் ஆண்டு படித்த வந்தார் ஐஸ்வர்யா. மாணவியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஊரடங்கால் இருவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனர். இதனால், செல்போனில் இருவரும் தங்கள் காதலை வளர்த்துள்ளனர். இந்த காதல் விவகாரம் இரண்டு பேரின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இரண்டு பேரையும் அவர்களின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால், ரதீஸ் உடன் பேசுவதை நிறுத்தி விட்டார் ஐஸ்வர்யா. கடந்த 3 மாதங்களாக ரதீஸிடம் ஐஸ்வர்யா பேசாமல் இருந்ததால், ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார் ரதீஸ். அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா. அப்போது, ஐஸ்வர்யாவின் கையை பிடித்த ரதீஸ், தன்னை மீண்டம் காதலிக்கும்படி கூறியுள்ளார். “என்னுடையே பெற்றோருக்கு நம் காதல் விவகாரம் தெரிந்துவிட்டது. இனி உன்னை என்னால் காதலிக்க முடியாது” என்று கூறிவிட்டார் ஐஸ்வர்யா.

இதனால் ஆவேசம் அடைந்த ரதீஸ், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை சரமாரியாக குத்திவிட்டார். அப்போது, மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தையையும் கைகளில் கத்தி குத்திவிட்டு அங்கிருந்து சதீஸ் தப்பிவிட்டார். பின்னர் தந்தை, மகள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார். இதனிடையே கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ள பேரூர் காவல்துறையினர் தப்பியோடிய ரதீஸை தேடி வருகின்றனர்.

காதலித்து விட்டு திடீரென காதலை உதறித்தள்ளி கல்லூரி மாணவியை காதலன் கொலை செய்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.