×

கர்ப்பமான பிறகும் பாலியல் தொந்தரவு: கணவனுக்கு சோற்றில் விஷம் வைத்த மனைவி!

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருக்கும் தோட்ட பகுதியில் வசித்து வந்த தம்பதி நந்தகுமார்- மைதிலி. இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. மைதிலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து ஆன நிலையில், நந்தகுமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், திடீரென வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த நந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் விஷம் கலந்திருப்பதை கண்டறிந்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நந்தகுமார்
 

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருக்கும் தோட்ட பகுதியில் வசித்து வந்த தம்பதி நந்தகுமார்- மைதிலி. இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. மைதிலிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து ஆன நிலையில், நந்தகுமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், திடீரென வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த நந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் விஷம் கலந்திருப்பதை கண்டறிந்து அந்தியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக நந்தகுமார் ஈரோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டே சென்றதால், போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது, வீட்டில் கசப்பான உணவு சாப்பிட்ட பிறகு தான் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாக நந்தகுமார் கூறியுள்ளார். அதனடிப்படையில், மைதிலியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரிடம் உண்மையை போட்டுடைத்த மைதிலி, திருமணமானதில் இருந்து 24 மணி நேரமும் நந்தகுமார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கர்ப்பமான பிறகும் இது தொடர்ந்ததால் ஆத்திரத்தில் சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடுமையான வயிற்று வலியால் நந்தகுமார் உயிரிழந்துள்ளார். மைதிலி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மைதிலி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.