×

`பெண்ணுடன் செக்ஸ்; கைவிட மறுத்த கணவன் !’- இரவில் கிரைண்டர் கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி

சென்னை பெண்ணிடம் தவறான உறவில் இருந்து வந்த கணவனை இரவு நேரத்தில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார் மனைவி. மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவராஜிக்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்துக் கொண்ட மனைவி கேத்தீஸ்வரி, கணவர் சிவராஜியிடம் கேட்டுள்ளார். அப்போது, இவருக்கும் இடையே அடிக்கடி
 

சென்னை பெண்ணிடம் தவறான உறவில் இருந்து வந்த கணவனை இரவு நேரத்தில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார் மனைவி.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் சிவராஜ். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சிவராஜிக்கு சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை தெரிந்துக் கொண்ட மனைவி கேத்தீஸ்வரி, கணவர் சிவராஜியிடம் கேட்டுள்ளார். அப்போது, இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த 24ம் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு முற்றியுள்ளது. பின்னர், சிவராஜ் தூங்க சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கேத்தீஸ்வரி, தூங்கிக்கொண்டிருந்த சிவராஜின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொல்ல முயன்றார்.

பலத்த காயம் அடைந்த சிவராஜின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிவராஜ் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் கேத்தீஸ்வரியை கைது செய்து ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.