“தாலி வேணாம் ,ஜாலி போதும்” -கட்டிக்க மறுத்த காதலி-வெட்டி வீதியில் வீசிய ரவுடி..
தாலி கட்டிக்க மறுத்த காதலியை, ரோட்டிலேயே காதலன் அறுத்து கொலை செய்த சம்பவம் சவுத் பெங்களூரு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சவுத் பெங்களூருவில் உள்ள கிரிநகரில் இருப்பவர் அபி கௌடா .இவர் மீது பல கொள்ளை வழக்குகள் உள்ளன ,இவர் இதற்கு முன்பு பிரகாஷ் நகரில் வசிக்கும்போது அந்த பகுதியிலுள்ள ஒரு பெண் இவரை காதலித்துள்ளார் .இவரும் அந்த பெண்ணை காதலித்துள்ளார் .அந்த பெண்ணை பார்ப்பதற்காக தினமும் அபி பிரகாஷ் நகருக்கு வருவாராம் .
அவர் வெட்டியதில் அந்த பெண் பலத்த காயமுற்று ,அந்த இடத்திலே ரத்த வெள்ளத்தில் கிடந்தார் .அப்போது அபிகௌடா அந்த இடத்திலிருந்து தப்பிஓடிவிட்டார் .பிறகு அந்த பெண் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பயனின்றி இறந்தார் .இந்த கொலை பற்றி தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து அபி கௌடாவை கைது செய்தனர் .