×

`ஆசைகாட்டிய தோழிகள்; ஓட்காவுக்கு அடிமையான பெண்!’- கணவனால் பறிபோன மனைவியின் உயிர்

தோழிகளால் குடிக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் கணவர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. அம்மாவை இழந்த 2 குழந்தைகளும் தவிர்த்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர், முருகவள்ளி என்ற பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 28ம் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில் முருகவள்ளி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து
 

தோழிகளால் குடிக்கு அடிமையான மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் கணவர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. அம்மாவை இழந்த 2 குழந்தைகளும் தவிர்த்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகராஜ். இவர், முருகவள்ளி என்ற பெண்ணை சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். தூத்துக்குடி தாளமுத்து நகரில் வசித்து வந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 28ம் தேதி வீட்டில் உள்ள படுக்கை அறையில் முருகவள்ளி சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவன் மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மனைவியை கொன்றுவிட்டு குழந்தைகளுடன் சண்முகராஜ் தலைமறைவானது தெரியவந்தது. ஊரடங்கால் வெளியூருக்கு நடந்தே சென்ற சண்முகராஜை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது, அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையினரிடம் சண்முகராஜ் அளித்த வாக்குமூலத்தில், “ஊரடங்கால் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன். அப்போது, எனது மனைவிக்கு குடிப்பழக்கம் இருந்தது தெரியவந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கின்ற இரண்டு பெண்களுடன் எனது மனைவி அடிக்கடி பேசி அவர்களுடன் பொழுதை கழித்து வந்தார். இந்த சூழ்நிலையில் என் மனைவியிடம், “நீ அழகாக இருக்க வேண்டுமானால் ஓட்காவை குடி” என்று அந்த பெண்கள் ஆசைகாட்டியுள்ளனர். இதை நம்பி எனது மனைவியும் ஓட்கா குடிக்க ஆரம்பித்து விட்டாள். எனது சட்டைபையில் இருந்து பணத்தை எடுத்து தோழிகளுடன் சேர்ந்து ஓட்கா குடித்து வந்துள்ளாள்.

இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்தில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மது குடிக்கும் அளவுக்கு மனைவி சென்றுவிட்டாள். இதனால் மனைவியை கண்டித்தேன். அப்போது, என் மனைவி, “நீ குடிக்க பணம் தரவில்லை என்றால் இரவில் தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு விடுவேன்” என்று பயமுறித்திதாள். இந்த நிலையில், குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற நான், மனைவிக்கு மதுவாங்கிக் கொடுத்தேன். போதையில் மனைவி தூங்கிவிட்டதால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சண்முகராஜை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததால் முருகவள்ளியின் உடலை வாங்க பெற்றோர் மறுத்துவிட்டனர். பின்னர் காவல்துறையினர் உடலை அடக்கம் செய்தனர்.