×

உஷார் !தொழிலதிபர்களோடு பழகி வீழ்த்தும் அழகிகள் -கௌரவத்துக்கு பயந்து கட்டுக்கட்டாக பணத்தை கொட்டி ஏமாறும் பணக்காரர்கள்.

டெல்லியில் இந்த ஊரடங்கு நேரத்தில் பொருளாதார பிரச்சினையால் பல பெண்கள், பெரிய தொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருவது தெரியவந்துள்ளது . சென்ற வாரம் டெல்லி கிருஷ்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு 19 வயது பெண் டெல்லி காந்திநகரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகாரளித்தார் .முதலில் போலீசார் எந்த சந்தேகமும் படாமல் அந்த பெண் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்டனர் .பிறகு போலீசார் விசாரணையில் அந்த பிரியா என்ற பெண்ணும்
 

டெல்லியில் இந்த ஊரடங்கு நேரத்தில் பொருளாதார பிரச்சினையால் பல பெண்கள், பெரிய தொழிலதிபர்களை வலையில் வீழ்த்தி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருவது தெரியவந்துள்ளது .

சென்ற வாரம் டெல்லி கிருஷ்ணாநகர் காவல் நிலையத்தில் ஒரு 19 வயது பெண் டெல்லி காந்திநகரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் மீது பாலியல் புகாரளித்தார் .முதலில் போலீசார் எந்த சந்தேகமும் படாமல் அந்த பெண் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்டனர் .பிறகு போலீசார் விசாரணையில் அந்த பிரியா என்ற பெண்ணும் இன்னும் சில பெண்களும் சேர்ந்து இப்படி பல தொழிலதிபர்களிடம் ஆசையாக பழகி, அந்தரங்கமாக போட்டோக்கள் எடுத்து விட்டு அதை காமித்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள் என தெரிய வந்துள்ளது .

அப்படித்தான் இந்த பெண்ணும் , தன்னுடைய சகோதரி என்று கூறும் இன்னொருவரும் அந்த தொழிலதிபரிடம் பழகி விட்டு, பிறகு போலீசில் அவர் மீது புகார் கொடுத்து விட்டு ,இந்த வழக்கினை முடிக்க 20 லட்சம் ரூபாய் பேரம் பேசிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .அவர்கள் இது போல அவரின் மகனிடமும் பழகிவிட்டு பணம் பறித்துள்ளனர் .இவர்களுக்கு பின்னால் பெரிய கூட்டமே செயல்படுவதை போலீசார் கண்டறிந்தனர் .

இதே போல டெல்லி ஜகத்புரி பகுதியில் ஒரு தம்பதியினர் போல வந்து ஒரு தொழிலதிபரை மிரட்டி மாதம் 10000ரூபாய் கேட்டுள்ளனர் .மறுத்தால் போலீசில் பாலியல் புகார் கொடுப்பதாக மிரட்டியுள்ளனர் .இப்போது போலீசார் பிரகாஷ் மண்டல் என்பவரின் தலைமையில் செயல்பட்ட அந்த கூட்டத்தினை கைது செய்துள்ளனர் .