×

“கொண்டு போய் பெண்டு நிமித்தினான்” -ஊடக நட்பில் கலங்கிய கார்ப்பரேஷன் பெண் ஊழியர் கற்பு

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட திடீர் நட்பால் ஒரு 16 வயது பெண் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை பல டீனேஜ் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையும் மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கார்பரேஷனில் ஒரு 16 வயது பெண் ஊழியர் பணி புரிந்து வந்துள்ளார் .இவர் எந்நேரமும் சமூக ஊடகத்தில் ஆண்களோடு அரட்டையடித்த வண்ணம் இருப்பாராம் .அப்படி ஒரு நாள் தானேவை சேர்ந்த ஒரு 18 வயது வாலிபன் அவருக்கு ஊடகத்தில் நண்பரானார் .அந்த ஆண் நண்பரோடு
 

சமூக ஊடகத்தில் ஏற்பட்ட திடீர் நட்பால் ஒரு 16 வயது பெண் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கொடுமை பல டீனேஜ் பெண்களுக்கு ஒரு பாடமாக அமையும்


மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள கார்பரேஷனில் ஒரு 16 வயது பெண் ஊழியர் பணி புரிந்து வந்துள்ளார் .இவர் எந்நேரமும் சமூக ஊடகத்தில் ஆண்களோடு அரட்டையடித்த வண்ணம் இருப்பாராம் .அப்படி ஒரு நாள் தானேவை சேர்ந்த ஒரு 18 வயது வாலிபன் அவருக்கு ஊடகத்தில் நண்பரானார் .அந்த ஆண் நண்பரோடு எந்நேரமும் அவர் சமூக ஊடகத்தில் பேசி வந்துள்ளார் .
இந்நிலையில் திடீரென அந்த வாலிபர் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு இடத்தில் தாம் சந்திக்க விரும்புவதாக கூறி வரச்சொன்னார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அவர் சொன்ன இடத்திற்கு ஆகஸ்டு 30ம் தேதியன்று இரவு சென்றார் .அந்த பெண் அங்கு சென்றதும் அந்த வாலிபர் அந்த பெண்ணை ஓர் காரில் தூக்கி கொண்டு போய் விட்டார் .
அதன் பிறகு மகளை சில நாட்களாக காணாத அவரின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார்கள் .புகாரை பெற்ற போலீசார் அந்த பெண்னின் சமூக ஊடக கணக்கினை ஆராய்ந்து அவரின் ஆண் நண்பரோடு அந்த பெண் போனதை அவர்களின் உரையாடல் மூலம் கண்டறிந்தாகள் . .பிறகு அவர்கள் தீவிர விசாரணை நடத்தி அந்த பெண்ணை இந்த புதன்கிழமை மீட்டனர் .அப்போது அந்த பெண் தான் அந்த ஊடக நண்பரை சந்திக்க போன போது அவர் காரில் தன்னை கடத்தி சென்று, இத்தனை நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார் என்று கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியுற்ற போலீசார் அந்த பெண்ணின் ஆண் நண்பரை கைது செய்து சிறையிலடைத்தனர்