×

"அடப்பாவி அந்தரங்கத்தை ஏண்டா எரிக்கிறே?" -17 வயது சிறுவனிடம் சிக்கிய 32 வயது பெண்ணின் கதி 

 


ஒரு பெண்ணை கெடுத்து எரித்து கொன்ற 17 வயது சிறுவனை போலீஸ் கைது செய்தது .


டெல்லியின் துவாரகா பகுதியில் வசிக்கும் ஒரு 17 வயதான சிறுவன் தன் வீட்டருகே வசிக்கும் 32 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ய திட்டமிட்டான் .அதன் படி அந்த சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைகளை கட்டி போட்டு ,பலாத்காரம் செய்தான் .பின்னர் அவரை பொலிஸார் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக அப்பெண்ணை  கொலை செய்து அவரின் பிறப்புறுப்புகளை எரித்து விட்டான் .பின்னர் அவரின் எரிந்த உடலை  ஒரு சாக்கு பையில் கட்டி சாக்கடையில் அருகே வீசி விட்டு சென்று விட்டார் .
அதன் பிறகு போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர் .ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.  இறந்த 32 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிரப்பட்டது.  பெண்ணின் குடும்பத்தினருக்கும் புகைப்படம் பற்றிய தகவல் சென்றடைந்தது.இந்த கொலை சம்பந்தமாக 2700 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அந்த பெண்ணின் வீட்டருகே வசிக்கும் 17 வயதான சிறுவன் தான் இந்த கொலை ,கற்பழிப்பை நடத்தியதை கண்டுபிடித்தனர் .பின்னர் அந்த சிறுவனை கைது செய்து ,அந்த சிறுவனிடம் இருந்து ஒரு மாருதி வேன், இரும்பு குழாய் ஒன்று, மண்ணெண்ணெய், டேப், எரிந்த துணிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.