×

"மாணவியான உன்னை என் மனைவியாக்கிடுறேன்  .." -ஆங்கில ஆசிரியரின் ஆசை வலையில் வீழ்ந்த மாணவி  

 


தன்னிடம் படிக்கும் ஒரு மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு ஆங்கில ஆசிரியரை போலீஸ் கைது செய்தது 


தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு 15 வயதான மாணவி 10ம் வகுப்பு படிக்கிறார் .அந்த பள்ளியில்  நந்தவனப்பட்டியைச் சேர்ந்த நாட்ராயம் என்ற 30 வயது ஆசிரியர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் திருமணமாகி மனைவியோடு வசித்து வருகிறார் .இந்நிலையில் அந்த ஆசிரியர் நாட்ராயமுக்கு அந்த 10ம் வகுப்பில் படிக்கும் மாணவி மீது ஆசை பிறந்தது .இதனால் அந்த மாணவிக்கு அவர் ஆசை வலை விரித்தார் .அதனால் அந்த மாணவிக்கு மட்டும் ஸ்பெஷலாக க்ளாஸ் எடுப்பது போல பாடம் நடத்துவார் .அப்போதெல்லாம் அந்த மாணவியிடம் தான் அவரை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறுவார் .
அதை அந்த பெண் உண்மையென்று நம்பி அவரிடம் நெருங்கி பழகினார் .மேலும் இப்படி அந்த மாணவியை ஏமாற்றி அந்த ஆசிரியர் பாலியல் பலத்காரமும் செய்துள்ளார் .இதனால் அந்த மாணவி எதுவும் சொல்லவும் முடியாமல் ,தடுக்கவும் முடியாமல் அவரின் ஆசைக்கு பணிந்துள்ளார்  .நாளடைவில் அந்த விஷயம்  அந்த மாணவி மூலம் அவரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது .இதனால் கோபமுற்ற அந்த பெற்றோர் அந்த ஆசிரியர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் .