×

நடத்தையில் சந்தேகம் : மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரை மேட்டு காலனி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஹரி – கோமதி தம்பதி. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோமதி மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரி எலக்ட்ரீசியனாக இருந்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஹரி அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாக
 

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவரே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த சின்ன நீலாங்கரை மேட்டு காலனி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ஹரி – கோமதி தம்பதி. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோமதி மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். ஹரி எலக்ட்ரீசியனாக இருந்து வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஹரி அடிக்கடி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இதே போல் சம்பவத்தன்றும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த மனைவியிடம் ஹரி குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்கும் சண்டை முற்றவே, வீட்டில் இருந்த கத்தியால் கோமதியை கணவர் ஹரி கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து மனைவியை கொன்று விட்டதாக கூறி ஹரி நீலாங்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை தொடர்ந்து கோமதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஹரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.