“மோதலில் முடிந்த போலீசுக்குள் உருவான காதல்” -பெண் கான்ஸ்டபிளை கொன்ற ஆண் கான்ஸ்டபிள் ..
இரண்டு கான்ஸ்டபிளுக்குள் உருவான காதல் ,சந்தேகத்தால் கொலையில் முடிந்தது .பெண் கான்ஸ்டபிள் தனக்கு துரோகம் செய்வதாக எண்ணிய ஆண் அவரை கொலை செய்திருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது .
தென் மேற்கு டெல்லியின் பாலம் கிராமத்தில் டெல்லி காவல்துறையில் பெண் கான்ஸ்டபிளாக பணிபுரியும் ப்ரீதி பெனிவால் ,நரேஷ் என்ற பி.எஸ்.எஃப் இல் பணியாற்றும் கான்ஸ்டபிளை காதலித்து வந்தார் . இருவரும் ஒரே பகுதியில் பணியாற்றுவதால் இருவருக்கும் காதல் அரும்பியது .இதனால் இவர்கள் பணியில்லாத நேரங்களில் அந்த பெண்ணின் வீட்டுக்கு இவர் அடிக்கடி சென்றுவருவது வழக்கம் .
இதனால் போலீசார் கான்ஸ்டபிள் நரேஷை கைது செய்து ,கொலை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் .