×

"டேய் உன் டீச்சர் என்னை விடுடா ?"-மறைந்திருந்த  மாணவனால் டீச்சருக்கு நடுரோட்டில் நேர்ந்த கதி .

 

ஒரு ஆங்கில டீச்சரை  நடுரோட்டில்  கத்தியால் வெட்டி தப்பிய மாணவனை, போலீசார் தேடி வருகின்றனர்.


தமிழகத்தின் விருத்தாசலம் பகுதியில் , விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது .இந்த பள்ளியில் ஆங்கில டீச்சராக ரேகா என்ற 42 வயதான பெண் பணிபுரிகிறார் .அந்த பள்ளி ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.அதனால்  இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம் .
இந்நிலையில் அந்த ரேகா சில நாட்களுக்கு முன்பு உணவு இடைவேளையின் போது அந்த பள்ளிக்கு அருகில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்றார் .
அப்போது ஒரு சாலையில் உள்ள ஒரு மரத்தடியில் ஒளிந்திருந்த ஒரு 18 வயதான மாணவன் பள்ளி சீருடையுடன் ஓடி வந்தார் .அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த டீச்சர்  ரேகா அதிர்ச்சியாகி  நின்றார் .அப்போது  அந்த மாணவன் திடீரென்று தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியை எடுத்து அந்த ரேகாவின் தலையில் பலமுறை வெட்டினார் .
இதனால் அந்த ரேகா  அந்த இடத்தில் அலறி துடித்து கீழே  ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் .அப்போது  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த ரேகாவை அருகிலுள்ள ஹாஸ்ப்பிட்டலுக்கு தூக்கி சென்றனர் .
அதன் பிறகு அந்த அந்த  ரேகாவை தாக்கிய மாணவர்  அங்கிருந்து தப்பியோடி விட்டார் .
பின்னர் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து அந்த மாணவரை வலைவீசி தேடி வருகின்றனர் .இப்போது ஹாஸ்பிட்டலில் இருக்கும் ரேகாவிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்