×

கல்லூரி மாணவன் தலை துண்டிக்கப்பட்டு கொடூரக் கொலை… குற்றவாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு; ஆத்தூர் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வரும் பரமசிவன் என்பவரது மகன் சத்திய மூர்த்தி(20). இவர் கல்லூரி படிப்பு 3 ஆம் ஆண்டு பயின்று வரும் நிலையில், விடுமுறையால் வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தியும் அவரது நண்பர்களும் கீழ கீரணூர் கிராமத்தில் இளநீர் திருடியுள்ளனர். அப்போது அதனை கண்ட ஊர்மக்கள் அவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து உதைத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர்களை மன்னிப்பு கேட்கவும் சொல்லியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அந்த
 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் வசித்து வரும் பரமசிவன் என்பவரது மகன் சத்திய மூர்த்தி(20). இவர் கல்லூரி படிப்பு 3 ஆம் ஆண்டு பயின்று வரும் நிலையில், விடுமுறையால் வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சத்தியமூர்த்தியும் அவரது நண்பர்களும் கீழ கீரணூர் கிராமத்தில் இளநீர் திருடியுள்ளனர். அப்போது அதனை கண்ட ஊர்மக்கள் அவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து உதைத்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர்களை மன்னிப்பு கேட்கவும் சொல்லியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அந்த கிராம மக்களின் சாதியை தவறாக பேசி மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.இதன் காரணமாக அந்த ஊரில் வசித்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் சத்திய மூர்த்தியை கொலை செய்து அவரது தலையை துண்டித்து அக்கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வீசியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சத்தியமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சத்தியமூர்த்தியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தலைவன்வடலி கிராம மக்கள் சாலை மறியலில் எடுப்பட்டுள்ளனர். இதானல் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே கொலை செய்யப்பட்ட மாணவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.