×

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி குத்திக் கொலை; சொத்துக்காகவா? போலீசார் தீவிர விசாரணை!

கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை வைசியாள் வீதி கெம்பட்டடிகாலனியில் வசித்து வந்தவர் தனலட்சுமி( 62). இவருக்கு ஒரு மகளும் 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது கணவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், இளைய மகனை தவிர எல்லாருக்கும் திருமணம் ஆகிவிட்டதாம். அதனால் இவர் தன் இளைய மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். நேற்று மணிகண்டன் வழக்கம் போல, வேலைக்கு சென்றதால் மூதாட்டி வீட்டில்
 

கோவை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வைசியாள் வீதி கெம்பட்டடிகாலனியில் வசித்து வந்தவர் தனலட்சுமி( 62). இவருக்கு ஒரு மகளும் 3 மகன்களும் இருக்கின்றனர். இவரது கணவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், இளைய மகனை தவிர எல்லாருக்கும் திருமணம் ஆகிவிட்டதாம். அதனால் இவர் தன் இளைய மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். நேற்று மணிகண்டன் வழக்கம் போல, வேலைக்கு சென்றதால் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை குத்திக் கொலை செய்து விட்டு, நகை பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இரவு வீடு திரும்பிய மணிகண்டன், தாய் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோப்ப நாய்களையும் தடவியல் நிபுணர்களையும் வரவழைத்த போலீசார் அங்கிருந்த கை ரேகைகளை பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மூதாட்டியின் பேரில் நிறைய சொத்துக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வீட்டில் திருட வந்த நபர்கள் அவரை கொலை செய்து விட்டு தப்பியோடினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.