×

‘தந்தை உலக்கையால் அடித்துக் கொலை’ : மாத்திரை சாப்பிட வற்புறுத்தியதால் மகன் வெறிச்செயல்!

கோவில்பட்டி அருகே மாத்திரை சாப்பிட வற்புறுத்திய தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(73). இவரது மனைவிகள் ராஜாகனி மற்றும் ஆனந்தி. முதல் மனைவிக்கு சரண்யா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு புருஷோத்தமன்(23) என்ற மகனும் இருக்கின்றனர். ராஜகனி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே மோகன்ராஜை பிரிந்து சென்ற நிலையில், அவர் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். புருஷோத்தமன் லேசான மனநலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
 

கோவில்பட்டி அருகே மாத்திரை சாப்பிட வற்புறுத்திய தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(73). இவரது மனைவிகள் ராஜாகனி மற்றும் ஆனந்தி. முதல் மனைவிக்கு சரண்யா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு புருஷோத்தமன்(23) என்ற மகனும் இருக்கின்றனர். ராஜகனி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே மோகன்ராஜை பிரிந்து சென்ற நிலையில், அவர் தனது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

புருஷோத்தமன் லேசான மனநலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தினமும் மாத்திரையும் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று புருஷோத்தமன் மாத்திரை சாப்பிடாததால் அதனை எடுத்துக் கொள்ளுமாறு மோகன்ராஜ் வற்புறுத்தியுள்ளார். இதில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட, ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த புருஷோத்தமன் மோகன்ராஜை உலக்கையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மோகன்ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார், மோகன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், அவரது மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.