×

"கையை பிடித்த மாமனாரை காரி துப்பிய மருமகள்" -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம். 

 

மருமகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாமனாரை மகனே அடித்துக் கொலை செய்தார்.


 
தமிழகத்தின் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி கருப்புகவுண்டன்காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதான ராஜேந்திரன் ,அங்கு தறிக்கூடத்தில் வேலை பார்த்துள்ளார். இவர் 2 ஆண்டுக்கு முன்பு விருதாசம்பட்டியை சேர்ந்த பெண்ணை தனது மூத்த மகன் வீரமணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் அதன் பிறகு அந்த மாமனார் ராஜேந்திரன், அடிக்கடி தன் மருமகளின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அந்த மருமகள் தன் கணவர் வீரமணியிடம் கூறியதும் ,அவர் தன் மனைவியை அழைத்து கொண்டு தனி குடித்தனம் போய் விட்டார் .ஆனால் அந்த மாமனார் அந்த வீட்டுக்கும் வந்து அவரின் மருமகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த பெண் அவரை திட்டி வெளியே துரத்தி விட்டார் .பின்னர் அவர் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு குடித்து விட்டு வந்து மருமகளிடம் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததால் ,அதை  பார்த்த அவரின் மகன் வீரமணி தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த மகன் வீரமணி  மீது வழக்கு பதிந்து ,கைது செய்து  விசாரித்து வருகின்றனர் .