×

“டேய் காரை ஓட்ட சொன்னா என் மகளை ஓட்டிட்டு போய்ட்டியே “-ட்ரைவரை கொன்ற தொழிலதிபர். ..

தனது மகளின் காதல் விவகாரத்தால் கொதிப்படைந்த அவரின் பணக்கார தந்தை ,மகளின் காதலனை கொலை செய்த சம்பவம் புனேவில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது . புனேவில் யஷ்வந்த் காம்பிள் என்பவர் கட்டிடங்கள் கட்டும் கான்ட்ராக்டராக இருக்கிறார் .அவருக்கு 19 வயதில் ஒரு மகளிருக்கிறார் .அவருக்கும் ஜந்தா வசஹாட்டில் வசிக்கும் சரோட் என்ற டிரைவருக்கும் காதல் முளைத்தது .இருவரின் காதல் விவகாரம் அந்த டீனேஜ் பெண்ணின் தந்தையான அந்த தொழிலதிபருக்கு தெரிந்து விட்டது .இதனால் கோபமுற்ற அவர் அந்த ட்ரைவரை
 

தனது மகளின் காதல் விவகாரத்தால் கொதிப்படைந்த அவரின் பணக்கார தந்தை ,மகளின் காதலனை கொலை செய்த சம்பவம் புனேவில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .

புனேவில் யஷ்வந்த் காம்பிள் என்பவர் கட்டிடங்கள் கட்டும் கான்ட்ராக்டராக இருக்கிறார் .அவருக்கு 19 வயதில் ஒரு மகளிருக்கிறார் .அவருக்கும் ஜந்தா வசஹாட்டில் வசிக்கும் சரோட் என்ற டிரைவருக்கும் காதல் முளைத்தது .இருவரின் காதல் விவகாரம் அந்த டீனேஜ் பெண்ணின் தந்தையான அந்த தொழிலதிபருக்கு தெரிந்து விட்டது .இதனால் கோபமுற்ற அவர் அந்த ட்ரைவரை கொலை செய்ய முடிவு செய்தார் .

அதனால் அந்த பெண்ணின் தந்தையான காம்பில் அவரின் இரண்டு நண்பர்களான ஆதேஷ் நானாவரே மற்றும் ஆயுஷ் காலே ஆகியோருடன் கூட்டு சேர்ந்துகொண்டு ,காதலன் சரோடை துப்பாக்கியால் சுட்டும் ,கத்தியால் பலமுறை குத்தியும் கொலை செய்துவிட்டு ,உடலை அங்குள்ள ஒரு காட்டுக்குள் தூக்கி போட்டுவிட்டு ஓடிவிட்டனர் .
மறுநாள் டிரைவர் கரோடின் உடல் அங்குள்ள அவரின் நண்பர் மொஹால் மூலம் முள்புதரில் கணடெடுக்கப்பட்டு, அருகிலுள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து கரோடின் உடலை கண்டெடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கரோடை கொலை செய்த யஷ்வந்த் காம்பில் ,ஆதேஷ் நானாவரே மற்றும் ஆயுஷ் காலே ஆகிய மூவரையும் கைது செய்தனர் .