“டேய் காரை ஓட்ட சொன்னா என் மகளை ஓட்டிட்டு போய்ட்டியே “-ட்ரைவரை கொன்ற தொழிலதிபர். ..
தனது மகளின் காதல் விவகாரத்தால் கொதிப்படைந்த அவரின் பணக்கார தந்தை ,மகளின் காதலனை கொலை செய்த சம்பவம் புனேவில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .
புனேவில் யஷ்வந்த் காம்பிள் என்பவர் கட்டிடங்கள் கட்டும் கான்ட்ராக்டராக இருக்கிறார் .அவருக்கு 19 வயதில் ஒரு மகளிருக்கிறார் .அவருக்கும் ஜந்தா வசஹாட்டில் வசிக்கும் சரோட் என்ற டிரைவருக்கும் காதல் முளைத்தது .இருவரின் காதல் விவகாரம் அந்த டீனேஜ் பெண்ணின் தந்தையான அந்த தொழிலதிபருக்கு தெரிந்து விட்டது .இதனால் கோபமுற்ற அவர் அந்த ட்ரைவரை கொலை செய்ய முடிவு செய்தார் .
மறுநாள் டிரைவர் கரோடின் உடல் அங்குள்ள அவரின் நண்பர் மொஹால் மூலம் முள்புதரில் கணடெடுக்கப்பட்டு, அருகிலுள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.