×

பலான படம் பார்த்ததால் நடந்த பயங்கரம் -இரண்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன் -செல்போனால் வந்த வினை ..

இப்போதெல்லாம் சிறுவர்களின் கையில் செல்போன் கிடைத்ததால் சமுதாயம் சீர்கெட்டுள்ளது .விஞ்ஞானத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாமல் சிறுவர்கள் எந்நேரமும் கேம் விளையாடுவதும் ,கண்ட படங்களை பார்த்து கெட்டுப்போவதும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள டெபாய் நகரில் வெள்ளிக்கிழமையன்று ,ஒரு தாய் தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை வீட்டருகே விளையாட வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார் .அப்போது பக்கத்து வீட்டு 12 வயது சிறுவனிடம் பார்த்துக்க சொல்லி விட்டு சென்றுள்ளார்
 

 

இப்போதெல்லாம் சிறுவர்களின் கையில் செல்போன் கிடைத்ததால் சமுதாயம் சீர்கெட்டுள்ளது .விஞ்ஞானத்தை நல்ல விஷயத்துக்கு பயன்படுத்தாமல் சிறுவர்கள் எந்நேரமும் கேம் விளையாடுவதும் ,கண்ட படங்களை பார்த்து கெட்டுப்போவதும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு


உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் உள்ள டெபாய் நகரில் வெள்ளிக்கிழமையன்று ,ஒரு தாய் தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை வீட்டருகே விளையாட வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார் .அப்போது பக்கத்து வீட்டு 12 வயது சிறுவனிடம் பார்த்துக்க சொல்லி விட்டு சென்றுள்ளார் .அந்த சிறுவன் அப்போது செல்போனில் கண்ட படங்களை பார்த்து கொண்டிருந்திருக்கிறான் .
இந்த நேரத்தில் அந்த தாய் அவரின் இரண்டு வயது பெண் குழந்தையை அவனிடம் விட்டு சென்றதும் ,அந்த சிறுவன் அந்த குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான் .அப்போது குழந்தை அலறும் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்தனர் ,உடனே அவர்கள் குழந்தையின் தாயிடம் நடந்த விவரத்தை கூறினார்கள் .இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த சிறுவன் மீது போலீசில் புகார் தந்தார் .புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .பாதிக்கப்பட்ட குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர் .