×

குளியல் வீடியோ… மிரட்டல்… பாலியல் வன்கொடுமை! – அண்ணன்- தம்பி டார்ச்சரால் உயிரை மாய்த்த இளம்பெண்

குளிக்கும் வீடியோவை எடுத்துக் கொண்டு இளம்பெண்ணை மிரட்டியதோடு, திமுகவை சேர்ந்த அண்ணன்- தம்பி ஆகியோர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தொடர் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரி சகோதரர், சுடுகாட்டில் போராட்டம் நடத்தி வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (47). இவரது மகள் சசிகலா (26). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து
 

குளிக்கும் வீடியோவை எடுத்துக் கொண்டு இளம்பெண்ணை மிரட்டியதோடு, திமுகவை சேர்ந்த அண்ணன்- தம்பி ஆகியோர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். தொடர் டார்ச்சரால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். தனது தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரி சகோதரர், சுடுகாட்டில் போராட்டம் நடத்தி வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (47). இவரது மகள் சசிகலா (26). இவர் கடந்த 24ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரர் செய்யூர் காவல் நிலையத்தில் புகா் அளித்தார்.

தேவேந்திரன்- புருஷோத்தமன்

அந்த புகாரில், திமுகவை சேர்ந்த தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷாேத்தமன் ஆகியோர் என் தங்கையை கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.  இதனிடையே, தேவேந்திரனும், புருஷோத்தமனும், சகிலா குளிக்கும்போது வீடியோ எடுத்து அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும், வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாகவும், சமீபத்தில் சசிகலாவுக்கு திருமண ஏற்பாடு செய்ததாகவும் அதனால் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தனது மகளின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி சசிகலாவின் தாயார் சந்திரா, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “எனது கணவர் வாதநோய் வந்து கை, கால் விழுந்து உடல் ஊனமுற்றவர். நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ரூபினி திருமணமாகி மாமியார் வீட்டில் உள்ளார். மகன் அருண்பாபு திருமணமாகவில்லை. அவர் என்னுடன் இருக்கிறார். இளைய மகள் சசிகலா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 24ம் தேதி காலை 10 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு இறந்துவிட்டார் என்ற செய்தி வேலைக்கு சென்றிருந்த எனக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் உறவினர் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

சசிகலாவின் சகோதரர் அருண்பாபு

பின்னர் எனது மகளின் தோழிகளிடம் விசாரித்தபோது மகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அவள் தானாக தூக்கிட்டு இறக்கவில்லை. அவளை எனது உறவினர் புருஷோத்தமன் மற்றும் அவரது தம்பி தேவேந்திரன் ஆகியோர் பல ஆண்டு காலமாக பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இது சம்பந்தமாக அவர்களை விசாரிக்கலாம் என நினைத்தபோது இருவரும் தலைமறைவாகிவிட்டனர். எனவே நாங்கள் வேறு ஒரு புகார் காவல் நிலையத்தில் கொடுத்தோம். இதுவரை அது சம்பந்தமாக சிஎஸ்ஆர் கொடுக்கலாம் தாமதம் செய்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நாங்கள் கொடுத்த புகார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையடுத்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்படட காவல் நிலையத்துக்கு எஸ்பி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் தேவேந்திரன், அவரது சகோதர் புருஷோத்தமன் ஆகியோர் மீது தற்கொலை செய்ய தூண்டியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனிடையே, தங்கை சசிகலாவின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்யக்கோரி அவரது சகோதரர் சுடுகாட்டில் போராட்டம் நடத்தி வருகிறார்.