×

`காதல்… உல்லாசம்… வீடியோ எடுத்து மிரட்டல்!’-இளம்பெண்ணை பதறவைத்த தனியார் ஊழியர்

காதலிப்பதுபோல் நடித்து இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியரை சென்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் , அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், இளம்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண், தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராமசந்திரன் (29) என்பவரைக் காதலித்தேன். அவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்துவருகிறார். காதலிக்கும்போது இருவரும் பல இடங்களுக்குச் சென்றோம். லாட்ஜ்களிலும்
 

காதலிப்பதுபோல் நடித்து இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் வெளியிட்ட தனியார் நிறுவன ஊழியரை சென்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் , அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், இளம்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண், தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராமசந்திரன் (29) என்பவரைக் காதலித்தேன். அவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்துவருகிறார். காதலிக்கும்போது இருவரும் பல இடங்களுக்குச் சென்றோம். லாட்ஜ்களிலும் அறை எடுத்து தங்கி சந்தோஷமாக இருந்தோம். அதை எனக்குத் தெரியாமல் ராமசந்திரன், தன்னுடைய செல்போனில் வீடியோ, போட்டோ எடுத்துள்ளார்.

இந்தச் சூழலில் என்னுடன் ராமசந்திரன் பேசுவதில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தனக்கு திருமணமாகிவிட்டது. அதனால் பிரிந்துவிடுவோம் என்று கூலாகச் சொல்கிறார். ஆனால், என்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். உடனே, ராமசந்திரன், நாம் இருவரும் சந்தோஷமாக இருந்த வீடியோ, புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன், மேலும் என்னை தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். அவர் கூறியதைப் போல சமூகவலைதளத்தில் என்னுடைய அந்தரங்க வீடியோ, புகைப்படங்களை ராமசந்திரன் பதிவு செய்துவிட்டார் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். இளம்பெண் அளித்த தகவலின்படி ராமசந்திரனை போலீஸார் தேடிவருகின்றனர்.