×

“மெத்தையில் படுத்து ,அத்தை மகளை கெடுத்து .. “விருந்துக்கு வந்தவர் பண்ண வேலைய பாருங்க..

ஒரு வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர் அந்த வீட்டாரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மும்பையில் புறநகர் மல்வானியில் வசிக்கும் 30 வயதான ஒரு தகவல் அறியும் செயற்பாட்டாளர் கடந்த மாதம் ஒரு உறவினரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார் .அப்போது அந்த வீட்டில் 17 வயது பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார் .அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த உறவினர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பின்னர் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால்
 

ஒரு வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர் அந்த வீட்டாரின் மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மும்பையில் புறநகர் மல்வானியில் வசிக்கும் 30 வயதான ஒரு தகவல் அறியும் செயற்பாட்டாளர் கடந்த மாதம் ஒரு உறவினரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றார் .அப்போது அந்த வீட்டில் 17 வயது பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார் .அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த உறவினர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பின்னர் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார் .
ஆனாலும் அந்தபெண் தன்னுடைய வீட்டிற்கு விருந்துக்கு வந்தவரின் பலாத்கார செயலை கடந்த செவ்வாய்க்கிழமை தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார் .அதை கேட்டு கடும் கோபமடைந்த அந்த தாய் தன்னுடைய மகளை கூப்பிட்டு கொண்டு நேராக அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது அந்த பெண் அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை கூறினார் .
அதன்படி அந்த தாய் சில மாதங்களுக்கு முன்பு அவர்களின் நெருங்கிய உறவினரான அவரை வீட்டில் தங்க வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார் .அப்போது அவர் வருவதற்கு தாமதமானதால் அன்று இரவு அவரின் மகளை பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறியுள்ளார் .அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த உறவினர் அப்போது அந்த இரவு நேரத்தில் அந்த 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் .மேலும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார் .அதனால் அந்த பெண் இந்த விஷயத்தை மனதில் போட்டு பூட்டி வைத்துள்ளார் .ஆனால் அப்பெண் பொறுக்க முடியாமல் தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.