×

பிரபல ரவுடி முருகன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை… அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்ம கும்பல் வெறிச்செயல்!

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது பல கொலை மற்றும் குற்ற சம்பவங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் முருகன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அறுவை சிகிச்சை பிரிவு 101 வார்டில் இருந்த முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் முருகன் சம்பவ இடத்திலேயே
 

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் மீது பல கொலை மற்றும் குற்ற சம்பவங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் முருகன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதையடுத்து ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அறுவை சிகிச்சை பிரிவு 101 வார்டில் இருந்த முருகனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த  ராஜாஜி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் முருகனுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் அதனால் பழிக்குப்பழி வாங்கவே முருகன் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது