×

பிரபல ரவுடி பங்க் பாபு வெட்டிக் கொலை: மர்ம நபர்களின் வெறிச்செயல்!

திருவண்ணாமலை, காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி பங்க் பாபு. இவர் மீது காவல்நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், அதிமுகவின் நகர செயலாளராக பதிவி வகித்து வந்த கனகராஜ் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தான் இந்த பங்க் பாபு. இந்த நிலையில், காந்தி நகர் பகுதியில் பங்க் பாபு 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்
 

திருவண்ணாமலை, காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ரவுடி பங்க் பாபு. இவர் மீது காவல்நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், அதிமுகவின் நகர செயலாளராக பதிவி வகித்து வந்த கனகராஜ் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி தான் இந்த பங்க் பாபு.

இந்த நிலையில், காந்தி நகர் பகுதியில் பங்க் பாபு 4 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார், பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாபுவை கொலை செய்த நபர்களை தேடி வருகின்றனர். அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

பாபு கொலை செய்யப்பட்டது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கனகராஜின் உறவினர்கள் பாபுவை கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.