×

கிணற்றுக்குள் கிடந்த சாக்குப்பையில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் : போலீசார் தீவிர விசாரணை!

இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மராட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் பாண்டுராவ். இவரது விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது . இதை கவனித்த விவசாய நிலத்தில் பணிபுரிவோர் உள்ளே பார்த்தபோது கிணற்றுக்குள் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை மீட்டு பிரித்துப் பார்த்தனர். அதில் அழுகிய நிலையில்
 

இளைஞர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மராட்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் பாண்டுராவ். இவரது விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது . இதை கவனித்த விவசாய நிலத்தில் பணிபுரிவோர் உள்ளே பார்த்தபோது கிணற்றுக்குள் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் கிடந்த சாக்கு மூட்டையை மீட்டு பிரித்துப் பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் , உடனடியாக காவல் துறையினருக்கும், தடயவியல் நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தடவியல் நிபுணர்கள் சடலத்தில் பல காயங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து உடலை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் ஆலங்காயத்தை சேர்ந்த சிவராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிவராஜை கொலை செய்தது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.