×

“இதுக்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவாங்க” -ஒரு தங்கையை ஒரு அண்ணன் எதுக்காக சுட்டார் பாருங்க.

தான் வளர்க்கும் நாய்களுக்கு சாப்பாடு கொடுக்காத தங்கையை ஒரு சகோதரன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது மீரட்டில் பவான்பூர் பகுதியில் வசிக்கும் ஆஷிஷ் என்ற 25 வயது நபர் தனது 23 வயது சகோதரி பருளுடன் வசித்து வந்தார் .அவர் தன்னுடைய வீட்டில் 20 நாய்களுக்கு மேல் வளர்த்து வந்தார் .அதனால் அந்த நாய்களுக்கு தினமும் சப்பாத்தியும் கறியும் செய்து கொடுக்க அவரின் சகோதரியிடம் கூறியிருந்தார் .அதனால் அவரின் சகோதரி தினமும் அந்த நாய்களுக்கு தினமும்
 

தான் வளர்க்கும் நாய்களுக்கு சாப்பாடு கொடுக்காத தங்கையை ஒரு சகோதரன் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது


மீரட்டில் பவான்பூர் பகுதியில் வசிக்கும் ஆஷிஷ் என்ற 25 வயது நபர் தனது 23 வயது சகோதரி பருளுடன் வசித்து வந்தார் .அவர் தன்னுடைய வீட்டில் 20 நாய்களுக்கு மேல் வளர்த்து வந்தார் .அதனால் அந்த நாய்களுக்கு தினமும் சப்பாத்தியும் கறியும் செய்து கொடுக்க அவரின் சகோதரியிடம் கூறியிருந்தார் .அதனால் அவரின் சகோதரி தினமும் அந்த நாய்களுக்கு தினமும் கறியோடு சாப்பாடு போட்டு வந்தார் .என்றாவது ஒரு நாள் அந்த நாய்களுக்கு சாப்பாடு கொடுக்கவில்லையென்றால் அந்த சகோதரர் ஆஷிஷ் அவரை திட்டுவார் .
அதனால் அவர் தன்னுடைய சகோதரருக்கு பயந்து கொண்டு அந்த நாய்களை கவனித்து வந்தார் .இந்நிலையில் கடந்த வாரம் திங்கள்கிழமை அந்த ஆஷிஷின் சகோதரி உடல்நிலை சரியில்லாததால் அந்த நாய்களுக்கு விருந்து வைக்க முடியாமல் விட்டு விட்டார் .இந்த விஷயம் அவரின் சகோதரர் ஆஷிஷுக்கு தெரியவந்துள்ளது .அதனால் அவர் தன்னுடைய சகோதரியிடம் “எதனால் நாய்களுக்கு சப்பாத்தியும் கறியும் வைக்கவில்லை அவைகள் பட்டினி கிடப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று திட்டினார் .
அதை கேட்டு அவரின் சகோதரி அவரிடம் “தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கவனிக்க முடியவில்லை” என்று கூறினார் .ஆனால் அதை கேட்டு கோபமுற்ற ஆகாஷ் ஒரு துப்பாக்கியை எடுத்து தன்னுடைய சகோதரியின் நெஞ்சிலும் ,தலையிலும் சுட்டார் ,இந்த துப்பாக்கி சூட்டில் அவரின் சகோதரி காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரை விட்டார்.இந்த கொலை பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .