×

“இனிஷியலுக்கு நான் ,இன்பத்துக்கு அவனா ?” -சந்தேகத்தால் மனைவிக்கு நேர்ந்த கதி

மனைவியை சந்தேகப்பட்ட கணவன் அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் அர்னோட் காவல் நிலைய பகுதியின் லல்கர் கிராம பஞ்சாயத்தில் ஒரு 40 வயதான பெண் தன்னுடைய கணவன் மற்றும் மகன்களோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவருக்கு திடீரென்று மதுப்பழக்கம் அதிகமானது .அதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் .அப்போது அவரின் மனைவி அருகிலுள்ள அவரின் வயதான தாயை கவனிக்க போயிருப்பார் .அதனால் சந்தேகப்பட்ட கனவன் அந்த
 

மனைவியை சந்தேகப்பட்ட கணவன் அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார்

ராஜஸ்தானின் பிரதாப்கர் மாவட்டத்தில் அர்னோட் காவல் நிலைய பகுதியின் லல்கர் கிராம பஞ்சாயத்தில் ஒரு 40 வயதான பெண் தன்னுடைய கணவன் மற்றும் மகன்களோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த கணவருக்கு திடீரென்று மதுப்பழக்கம் அதிகமானது .அதனால் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவார் .அப்போது அவரின் மனைவி அருகிலுள்ள அவரின் வயதான  தாயை கவனிக்க போயிருப்பார் .அதனால் சந்தேகப்பட்ட கனவன் அந்த பெண்ணை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார் .

மேலும் அவருக்கு வேறு யாருடனோ கள்ள உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு அவரை வார்த்தைகளால் ஆபாசமாக அவரின் தாய் வீட்டில் வந்து திட்டுவார் ,பின்னர் அவரின் மனைவியை நடுரோட்டிலேயே அடித்து இழுத்து செல்வார் .

நாளடைவில் அவரின் சந்தேகமும் குடிப்பழக்கமும்  அதிகமானதால் அவர் தன்னுடைய  மனைவியை அங்குள்ள 30 கிலோ இரும்பு சங்கிலியெடுத்து ஒரு கட்டி போட்டு வைத்திருந்தார் .அவருக்கு உணவு  தண்ணீர் எதுவும் கொடுக்காமலே கொடுமைப்படுத்தினார் .இந்த  விஷயம் அருகில் உள்ள வீட்டினர் மூலம் போலீசுக்கு தெரிய வந்துள்ளது  ,அதனால் பொலிசார் அந்த வீட்டினுள் அதிரடியாக நுழைந்து அந்த பெண்ணை  சங்கிலியால் கட்டி போட்டிருப்பதை பார்த்து அவரை  மீட்டு  கொண்டு வந்தனர் .பின்னர் அவரை அங்குள்ள ஒரு சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை கொடுத்தனர் .அதன் பிறகு மனவியை கொடுமைகளை செய்த  கணவரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .