சிகிச்சைக்கு வந்த பெண் -சில்மிஷம் செய்த ஊழியர் -அடுத்து ஹாஸ்ப்பிட்டலில் இரவில் நடந்த கொடுமை
சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஹாஸ்ப்பிட்டல் ஊழியரை போலீஸ் தேடி வருகிறது
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் கோட்வாலி நகர் பகுதியில் வசிக்கும் ஒரு 18 வயதான பெண்ணுக்கு அடிக்கடி வயிறு வலி பிரச்சினை ஏற்படும் .அதனால் அவர் அங்குள்ள ஒரு ஹாஸ்ப்பிட்டலில் சிகிச்சைக்கு சென்று அங்கு கொடுக்கும் மருந்துகளை வாங்கி வருவார் .
இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமையன்று அந்த பெண்ணுக்கு வயிறு வலி அதிகமானது அதனால் மீண்டும் அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு சென்றார் .அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவரை அட்மிட் செய்தார்கள் .அதன் பிறகு அவருக்கு சில வலி நிவாரணி மாத்திரைகளை கொடுத்து தூங்க சொன்னார்கள் அப்போது அந்த பெண்ணை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார் .
பின்னர் அந்த பெண் இரவில் அந்த ஹாஸ்ப்பிட்டல் வார்டில் தூங்கும்போது அந்த ஊழியர் ஷியாம் குஜ்ஜார் வார்டுக்குள் மெல்ல வந்தார் .அப்போது இரவு 1 மணியளவில் அந்த வார்டுக்குள் வந்த அவர் அங்கிருந்த விளக்கை நிறுத்தினார் .அதன் பிறகு அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டு பலாத்காரம் செய்ய முயன்றார் .அதன் பிறகு அந்த பெண் தூக்கத்திலிருந்து எழுந்து அலறினார் ,அதனால் அந்த ஊழியர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் .அதன் பிறகு அந்த பெண் அந்த ஹாஸ்ப்பிட்டலிலிருந்து தப்பி வந்து இந்த விஷ்யத்தை தன்னுடைய குடும்பத்தாரிடம் கூறினார் .அதை கேட்டு கொதித்த அவர்கள் இந்த விஷயத்தை போலீசில்புகாரலித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ஊழியர் ஷியாம் குஜ்ஜாரை பிடிக்க அந்த ஹாஸ்ப்பிட்டல் சிசிடிவி கேமரா காட்சியை ஆராய்ந்து வருகின்றனர் .