×

“ஒருத்தன் தாலி கட்டிட்டு ,ரெண்டு பேர் ஜாலியா இருக்கீங்களே” -கர்ப்பினிக்கு நேர்ந்த கொடுமை

ஒரு கர்ப்பிணி பெண்ணை கடத்தி ஒருவர் கல்யாணம் செய்து கொண்டு, இருவர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது. அசாமைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தனது மூன்று வயது மகளோடு தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் தன்னுடைய மகளோடு ஒரு நாள் இரவு வெளியே சென்றார் .அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணையும் அவரின் மூன்று வயதான மகளையும் கடத்தி சென்றார் . அவர் அந்த பெண்ணை ராஜஸ்தானின் கார்வீர் தெஹ்ஸிலில்
 

ஒரு கர்ப்பிணி பெண்ணை கடத்தி ஒருவர் கல்யாணம் செய்து கொண்டு, இருவர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.

அசாமைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தனது மூன்று வயது மகளோடு தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண் தன்னுடைய மகளோடு ஒரு நாள் இரவு வெளியே சென்றார் .அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒருவர் அந்த பெண்ணையும் அவரின் மூன்று வயதான மகளையும் கடத்தி சென்றார் .

அவர் அந்த பெண்ணை ராஜஸ்தானின்  கார்வீர் தெஹ்ஸிலில் உள்ள பஞ்ச்கான் கிராமத்திற்கு கொண்டு சென்றார் .பிறகு அங்கு வைத்து அந்த பெண்ணுக்கு தாலி கட்டி மனைவியாக்கிக்கொண்டார் .அப்போது அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவரின் மூன்று வயதான மகளை கொன்று விடுவதாக மிரட்டினார் .அதனால் அந்த பெண்  பயந்து போய் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் .

அதன் பிறகு அந்த பெண் மேலும் இருவரோடு உறவு கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார் .அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த போது ,அப்போதும் அவரின் மகளை கொன்று விடுவதாக கூறினார்கள் ,பின்னர் அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  அவரை இருவர் பலாத்காரம் செய்தார்கள் .பிறகு மேலும் ஒருவரோடு அவரை  உறவுக்கு கட்ட்டாயப்படுத்தியபோது, அந்த பெண் அங்கிருந்து தப்பி வந்து விட்டார் .

அதன்  பிறகு அந்த பெண் போலீசில் அந்த நபர்கள் மீது புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த குற்றவாளியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்  .