×

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது – ரூ.1.47 லட்சம் பறிமுதல்

கோவை பொள்ளச்சி அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோழனூர் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சிலர் பணம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையய போலீசார், அங்கு காளிமுத்து என்பவரது தோட்டத்தில் வெளியூரை சேர்ந்த சில
 

கோவை

பொள்ளச்சி அருகே தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சோழனூர் கிராமத்தில் தனியார் தோட்டத்தில் சிலர் பணம் கட்டி சூதாட்டம் நடத்துவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொள்ளாச்சி தாலுகா காவல்நிலையய போலீசார், அங்கு காளிமுத்து என்பவரது தோட்டத்தில் வெளியூரை சேர்ந்த சில நபர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை மடக்கிப்பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 1 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அந்த பகுதியில் வேறு எங்கும் சூதாட்டம் நடைபெறுகிறதா என போலீசார் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.