×

ரம்மி விளையாடி… பணம் இழப்பு… மாயமான போலீஸ்காரர்!- கண்ணீருடன் தவிக்கும் மனைவி

ஆன்-லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் மனைவி. இந்த சோக சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் தமிழக அரசின் 11வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கு காவலராக பணியாற்றி வருகிறார் சேரன் பாண்டியன், 27 வயதான தனது மனைவியுடன் காவலர் புதிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பால்
 

ஆன்-லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் மனைவி. இந்த சோக சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் தமிழக அரசின் 11வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கு காவலராக பணியாற்றி வருகிறார் சேரன் பாண்டியன், 27 வயதான தனது மனைவியுடன் காவலர் புதிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் நடந்த ஊரடங்கால் வீட்டில் இருந்த சேரன்பாண்டியன், பொழுது போக்கிற்காக ஆன்-லைனில் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரம்மி விளையாட்டின் மீதான ஆர்வத்தால் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதனால் கடனில் சிக்கியுள்ளார் சேரன்பாண்டியன். கடனை அடைப்பதற்காக மனைவியின் நகையை அடமானம் வைத்து கடனை அடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சேரன்பாண்டியன் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, வன்னியம்பட்டி காவல்நிலையத்தில், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவலர் சேரன் பாண்டியனை தேடி வருகின்றனர்.