×

“பொட்டு வைத்தவுடனே என்னை பெட்டுக்குள் தள்ளினார் “-ஒரு போலீஸ் அதிகாரியின் மோகத்துக்கு பலியான பெண்

ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை உறவு கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் தேவ்ரி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி கவுரவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஞ்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தார் .அவர்கள் இருவரும் சமூக ஊடகம் மூலம் 2018ம் ஆண்டு முதல் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளார்கள் .அதன் பிறகு ஒருவரோடொருவர் ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்துள்ளார்கள் .அதன் பிறகு
 


ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை உறவு கொண்ட ஒரு போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .


ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் தேவ்ரி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி கவுரவ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஞ்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தார் .அவர்கள் இருவரும் சமூக ஊடகம் மூலம் 2018ம் ஆண்டு முதல் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளார்கள் .அதன் பிறகு ஒருவரோடொருவர் ஊடகத்தின் மூலம் அரட்டையடித்து வந்துள்ளார்கள் .அதன் பிறகு அவர்களிருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள் .மேலும் 2019ம் ஆண்டில் அந்த போலீஸ் அதிகாரி அந்த பெண்ணிடம் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உறவு கொண்டுள்ளார் .அதன் பிறகு அந்த பெண்ணை கழட்டி விட முடிவு செய்துள்ளார் .
அந்த பெண் அவரிடம் திருமணம் செய்து கொள்ள கேட்கும் போதெல்லாம் அவர் அந்த பெண்ணை தவிர்க்க தொடங்கினார் .இதன் காரணமாக அந்த பெண் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தார் .இந்நிலையில் அந்த போலீஸ் அதிகாரிக்கு வேறு ஒரு இடத்தில திருமணம் நிச்சயிக்கப்பட்டது .இதன் காரணமாக அவர் அந்த காதலியை விடுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்தார் ,இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் மீது போலீசில் புகார் கூறினார் .அப்போது அவரளித்த புகாரில் “அந்த சவுரவ் தனக்கு பொட்டு வைத்து விட்டு பல முறை பெட்டில் தள்ளி உறவு கொண்டார் .அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார்”என்று புகார் கூறியுள்ளார் .அதனால் அவரின் புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் மஹிலா தானாவில் கவுரவ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது .