×

"டச் பண்ணி டச் பண்ணி ஏன் தூங்க விடாம டார்ச்சர் செய்யுறே?" -டிஎஸ்பி யிடம் ரயிலில் இரவில் சிக்கிய மாணவி  கதறல்

 

 

ரயிலில் சென்ற கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, பயிற்சி டி.எஸ்.பி.,யை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

 தமிழகத்தின் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவி ஒருவர், கல்லுாரி விடுமுறை காரணமாக, 1ம் தேதி இரவு சென்னை எழும்பூரில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலில், சொந்த ஊருக்கு புறப்பட்டார்.'அப்போது அந்த ஏசி' ரயில் பெட்டியில், அந்த மாணவி இருக்கைக்கு எதிரே அமர்ந்து வந்த போலீஸ் டிஎஸ்பி 32 வயதான மகேஷ் குமார் என்பவர் பயணம் செய்தார்  .அப்போது அந்த டிஎஸ்பி அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தார் ,அவரை தவிர்க்க  அப்பெண் ரயில் பெட்டியில் விளக்கை அணைத்து விட்டு தூங்கினார் .
அப்போது அந்த டிஎஸ்பி அந்த பெண்ணிடம் தூங்கும்போது டச்  பன்னி பாலியல் தொல்லை கொடுத்து கொண்டே வந்தார் .இதனால் அந்த பெண்  பலமுறை அவரை எச்சரித்தும் அவர் சீண்டலை  நிறுத்தாமல் வந்தார் .இதனால் அந்த பெண் போலிசுக்கு செயலி மூலம் புகார் கொடுத்தார் 
உடனே, அந்த ரயிலில்  வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்றும் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஆகியோர், மாணவி பயணித்த பெட்டிக்கு சென்று விசாரித்தனர். எதிரே படுத்திருந்த டிஎஸ்பி மீது, மாணவி புகார் செய்தார்.உடனே போலீசார் அந்த டிஎஸ்பியை   கைது செய்து விசாரிக்கின்றனர்.