×

“பிரிய நினைத்தனர் ,பிள்ளைகளை துரத்தினர்” -பிரிந்த தம்பதிகளால் பிள்ளைகளின் கதியை பாருங்க

விவாகரத்து செய்து கொள்ள விரும்பிய ஒரு தம்பதிகள் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளை ஒருவருக்கு விற்றுவிட்டதால் போலீசுக்கு தெரிந்து அவர்களை கைது செய்துள்ளார்கள் . ஒடிசாவின் பழங்குடி மாவட்டமான மல்கன்கிரியில் உள்ள அகூப்பிள் வசிக்கும் ஒரு தம்பதியினர் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்தார்கள் .ஒரு மகனுக்கு க்கு 10 வயதும் இன்னொரு மகனுக்கு 9 வயதும் ஆகிறது இந்நிலையில் அந்த பிள்ளைங்களின் பெற்றோர்க்கு திருமண வாழ்க்கை கசந்து போனதால் இருவரும் பரஸ்பரம் பிரிந்து போக முடிவு செய்தனர் .இதனால்
 

விவாகரத்து செய்து கொள்ள விரும்பிய ஒரு தம்பதிகள் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளை ஒருவருக்கு விற்றுவிட்டதால் போலீசுக்கு தெரிந்து அவர்களை கைது செய்துள்ளார்கள் .

ஒடிசாவின் பழங்குடி மாவட்டமான மல்கன்கிரியில் உள்ள அகூப்பிள் வசிக்கும் ஒரு தம்பதியினர் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்தார்கள் .ஒரு மகனுக்கு க்கு 10 வயதும் இன்னொரு மகனுக்கு 9 வயதும் ஆகிறது இந்நிலையில் அந்த பிள்ளைங்களின் பெற்றோர்க்கு திருமண வாழ்க்கை கசந்து போனதால் இருவரும் பரஸ்பரம் பிரிந்து போக முடிவு செய்தனர் .இதனால் அவர்கள் தங்களுக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளையும் யாருக்காவது விற்று விட முடிவு செய்தார்கள் .
அதன் படி மூத்த மகனை முதலில் ஒருவருக்கு விற்று விட்டார்கள் ,இரன்டாவது மகன்9 வயது பசுதேவை ஒருவருக்கு மாடு மேய்க்கும் வேலைக்கு விற்று விட்டார்கள் .இதனால் அந்த சிறுவனை வாங்கிய நபர் வீட்டிலுள்ள அனைத்து மாடுகளையும் மேய்க்க விட்டதோடு ,வீட்டு வேலையாட்கள் அணிவரையும் நிறுத்தி விட்டு எல்லா வேலைகளையும் அந்த சிறுவன் தலையிலே கட்டினார்கள் .இதனால் அந்த சிறுவன் வேலை பளு தாங்க முடியாமல் அங்குள்ள ஒரு அங்கண் வாடிக்கு தப்பித்து ஓடிவிட்டான் ..அங்கு ஜெயந்தி என்ற பெண் அவனுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வந்தார் .ஆனால் இரண்டு நாட்களாக சிறுவனை காணாமல் அவனை விலைக்கு வாங்கியவர்கள் தேடிய போது, அவர் அங்கண் வாடியில் இருக்கும்விஷயம் தெரிந்து கொண்டார்கள் .பிறகு அங்கு சிறுவனை கூட்டி வர சென்ற போது நடந்த கலவரத்தில் குழந்தைகள் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .அவர்கள் வந்து சிறுவனை மீட்டு சென்றனர் .பிறகு பெற்ற பிள்ளையாகளை விற்ற பெற்றோர்களை போலீசார் கைது செய்தார்கள்