×

தெலுங்கானாவில் மாற்று சாதி இளைஞரை காதலித்து கர்ப்பம் ஆன பெண் ! கருவை கலைக்க மறுத்ததால் மகளை கொன்ற பெற்றோர் !

தெலுங்கானாவில் வேறு சாதியுடன் பழகிய மகள் கர்ப்பம் ஆனதால் கருவை கலைக்க மறுத்த பாவத்திற்கு பெற்றோரோல் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜோகுலம்பா-கட்வால் மாவட்டத்தில் கலுகுண்ட்லாவில் ஜூன் 7 அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த 20 வயது கர்ப்பிணி மகளை பெற்றோர் தலையணையைப் பயன்படுத்தி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். ஆணவக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கில், 20 வயதுடைய ஒரு பெண், மற்றொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, கர்ப்பம் ஆனதால் அவரது பெற்றோர் கருக்கலைப்பு செய்ய முயன்றனர்.
 

தெலுங்கானாவில் வேறு சாதியுடன் பழகிய மகள் கர்ப்பம் ஆனதால் கருவை கலைக்க மறுத்த பாவத்திற்கு பெற்றோரோல் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஜோகுலம்பா-கட்வால் மாவட்டத்தில் கலுகுண்ட்லாவில் ஜூன் 7 அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த 20 வயது கர்ப்பிணி மகளை பெற்றோர் தலையணையைப் பயன்படுத்தி கொன்றதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆணவக் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வழக்கில், 20 வயதுடைய ஒரு பெண், மற்றொரு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, கர்ப்பம் ஆனதால் அவரது பெற்றோர் கருக்கலைப்பு செய்ய முயன்றனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண் மாரடைப்பால் இறந்ததாகக் கூறி அதை இயற்கை மரணம் என்று பொய் சொல்லி உள்ளனர். கல்லூரி மாணவி மரணம் தொடர்பாக கிராமச் செயலாளர் எழுப்பிய சந்தேகங்களைத் தொடர்ந்து அந்த பெண் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றச்சாட்டில் தம்பதிகள் கைது செய்யப்பட்டனர்,
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள கர்னூல் மாவட்டத்தில் படித்துக்கொண்டிருந்தபோது அந்தப் பெண் மாற்றுச் சாதி இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதனால் மகள் தன் காதலனுடன் ஓடிப்போய்விடுவாள் என்று அவளுடைய பெற்றோர் அஞ்சினர். மேலும் கருக்கலைப்புக்கு செல்லும்படி அவளுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆரம்பத்தில் அவர் ஒப்புக்கொண்ட போதிலும், பின்னர் அவர் மறுத்துவிட்டார், அதைத் தொடர்ந்து அவர்கள் அவரைக் கொன்றார்கள், தங்கள் மகள் மாரடைப்பால் இறந்ததாக எல்லோரிடமும் சொன்னார்கள் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.