கடையை காலி செய்யச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் பிரமுகரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி! – கும்பகோணத்தில் அதிர்ச்சி
கும்பகோணத்தில் மடத்துக்கு சொந்தமான கடையை காலி செய்யச் சொன்ன மேலாளரை பா.ஜ.க நகர தலைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து அமைப்புகள் என்ன செய்யப் போகின்ற என்ற கேள்வியை சமூகவலைதளவாசிகள் எழுப்பி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோபாலன் (65). ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பொறுப்பாளராக இருந்தவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஶ்ரீஶ்ரீ108 அபினவ உத்தராதி மடத்தின் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்த மடத்துக்கு கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் பகுதியில் நிறைய சொத்துக்கள் உள்ளது. இதை கோபாலன் நிர்வகித்து வந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, கோபாலனை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், பா.ஜ.க நிர்வாகியை கைது செய்தனர்.
பொதுவாக இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டாலே பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் தாக்கி கொலை செய்துவிட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் கண்ணீர் விடுவது குறிப்பிட்ட கட்சி ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களின் வழக்கம். தற்போது கொலை செய்யப்பட்டவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் முன்னாள் நிர்வாகி, கொலை செய்தது பா.ஜ.க நிர்வாகி. கொலை செய்யப்பட்டவருக்கு நீதி கிடைக்க பா.ஜ.க-வினர் பொங்குவார்களா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.