×

“காதலனின் களவானித்தனம்”- மகளின் மார்பிங் செய்த படத்தால் தாய் தற்கொலை

ஒரு தாய் தன்னுடைய டீனேஜ் மகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் ,அவமானத்துக்கு பயந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது . ஒடிஷா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் சுபாங்கர் தலாய் என்ற 24 வயது வாலிபரை ஒரு 17 வயது பெண் காதலித்து வந்துள்ளார் .அப்போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக போவதும் ,சினிமா பார்ப்பதும் ,ஹோட்டலுக்கு போவதுமாக இருந்துள்ளார்கள் .அந்த நேரத்தில்
 

ஒரு தாய் தன்னுடைய டீனேஜ் மகளின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதால் ,அவமானத்துக்கு பயந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

ஒடிஷா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் சுபாங்கர் தலாய் என்ற 24 வயது வாலிபரை ஒரு 17 வயது பெண் காதலித்து வந்துள்ளார் .அப்போது இருவரும் பல இடங்களுக்கு ஒன்றாக போவதும் ,சினிமா பார்ப்பதும் ,ஹோட்டலுக்கு போவதுமாக இருந்துள்ளார்கள் .அந்த நேரத்தில் அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணை பல கோணங்களில் விதவிதமாக படமெடுத்துள்ளார் .
பிறகு அந்த காதலன் அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள விரும்பி அவரை அதற்கு அழைத்துள்ளார் .ஆனால் அந்த பெண்ணோ அதெல்லாம் கல்யாணத்திற்கு பிறகுதான் இப்போது முடியாது என்று மறுத்துவிட்டு வீட்டுக்கு போய் விட்டார் .
இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் காதலன் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார் .பிறகு அந்த ஆபாச படங்களை பார்த்த அந்த பெண்ணின தோழிகள் அந்த படத்தை பற்றி அவரிடம் பேசி ,கேலியும் கிண்டலும் செய்துள்ளனர் .இதனால் அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய தாயிடம் கூறினார் .அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த 48 வயது தாய் இனி எப்படி நான் ஊருக்குள் தலை காமிப்பேன் ,இனி உன்னை யார் கல்யாணம் கட்டிக்கொள்வார்கள் என்று புலம்பி சோகத்திலிருந்தார் .
இதனால் கடந்த திங்கள் கிழமையன்று இரவு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .தாயின் தற்கொலையை பார்த்து அதிர்ச்சியுற்ற அந்த பெண் உடனே காவல் நிலையம் சென்று தன்னுடைய தாயின் தற்கொலைக்கு காரணமான தனது காதலன் மீது புகார் தந்தார் .அந்த காதலன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள் .