“ஒழுங்கா வேலைய பாரு இல்லேன்னா போய் வீட்டை பாரு”அதிகாரி திட்டியதால் தற்கொலை செய்த பெண் போலீஸ்..
இன்று இருக்கும் சூழலில் அனைவருமே கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் .அதுவும் பெண் போலீசுக்கு சொல்லவே வேண்டாம் .இப்படித்தான் ஒரு பெண் போலீசுக்கு அலுவலக உயர் அதிகாரியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நொய்டாவில் கவுதம புத்த நகர் மாவட்டத்தின் மோர்னா பகுதியில் இருக்கும் 29 வயதான பெண் போலீஸ் பருல் .அவர் தன்னுடைய கணவர் அமித் குமார் மற்றும் குழந்தையோடு வசித்து வந்தார் .அந்த பெண் போலீஸ் பருளுக்கு அவரின் மேலதிகாரியால் வேலையில் சில பிரச்சினைகள் இருந்துள்ளன .அதனால் அவருக்கு அதிகாரியிடமிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது .அந்த நோட்டீஸில் ,தினமும் மூன்று மணி நேரம்தான் பணிசெய்வதாகவும் ,சக ஊழியர்களிடம் மோசமாக நடந்து கொள்வதாகவும் ,அதனால் பணியை ஏன் ஒழுங்காக செய்யவில்லை என்று விளக்கம் கேட்டுள்ளனர் .